தந்தை செல்வா நற்பணி மன்ற வெள்ளி விழா! லங்காசிறி ஊடகவியலாளர் கௌரவிப்பு (Video)
தந்தை செல்வா நற்பணி மன்ற வெள்ளி விழாவை முன்னிட்டு கடந்த 30ஆம் திகதி கௌரவிப்பும், மலர் வெளியீடும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு கொழும்பு விவேகானந்தர் சபை பிரதான மண்டபத்தில் நடத்தப்பட்டிருந்தது.
இந்த கௌரவிப்பு விழாவில் லங்காசிறியின் ஊடகவியலாளர் டில்சான் வின்ஷன் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பலரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக ஆளுனர் லயன் ஆர்.எல் ராஜ்குமார் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்குதல், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் கூடிய புள்ளிகள் எடுத்த மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும், கண் பரிசோதனை செய்தவர்களுக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நடைபெற்று மன்றத்தில் சேவை செய்த உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அமரர் பிரதி பொலிஸ்மா அதிபர் அரசரட்ணம் அரங்கில் நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் ஏனைய மாகாணங்களை சேர்ந்த சுமார் 21 பேர் தந்தை செல்வா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்விற்கு லங்காசிறி ஊடக வலையமைப்பு இணை அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது? தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அரங்கத்தையே பிரம்மிக்க வைத்த ஆராதனா! Manithan

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri
