கொழும்பில் இருந்து சென்னை சென்றவர் கைது! கைப்பற்றப்பட்ட தங்கம்
கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட 37 இலட்சம் பெறுமதியான 852 கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் தமிழக சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக தமிழக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் சென்னையில் இன்று கொழும்பில் இருந்து வந்த விமானப் பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கடத்தல் குறித்து விளக்கம் அளித்த சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர், கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.37.88 லட்சம் என்றும், கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 23 மணி நேரம் முன்
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam