வவுனியாவில் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி எற்றப்பட்டது
வவுனியாவில் சுகாதாரத் துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (29.04) இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது .
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கோவிட்-19, “கோவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்களிற்கு ஏற்றும் பணி கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய மூன்று மாதங்களின் பின்னர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றும் பணிகள் வடக்கில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைய வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ சேவையாளர்களிற்கு இரண்டாவது டோஸ்
ஏற்றும் செயற்பாடுகள் இன்று இடம்பெற்றது.