பசியால் வாடும் பாடசாலை மாணவர்கள்..! வெளியான தகவல்
பாடசாலைகளில் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வில், ஏராளமான பாடசாலை மாணவர்கள் பசி மற்றும் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு மற்றும் குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் ஆகியவை கடந்த ஆண்டு இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளன.
இதற்கமைய, 40 அரச பாடசாலைகளில் 8 மற்றும் 12ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 3,843 மாணவர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
உட்கொள்ளும் உணவு...
இதில், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 4.7 சதவீதமானோர் பசியால் வாடுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 17.4 வீதமானோர் ஆரோக்கியமற்ற பானங்களை உட்கொள்வதாகவும், அவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், 28 வீதமான மாணவர்கள் தினமும் சர்க்கரை பானங்களை உட்கொள்வதாகவும், 28.5 வீதமானவர்கள் உப்பு நிறைந்த சிற்றுண்டிகளை உட்கொள்வதாகவும் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், 29.3 வீதமான மாணவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளையும், 40.9 வீதமானோர் அதிக சீனி உள்ள உணவுகளையும் தினமும் உட்கொள்வதாக அறிக்கை கூறுகிறது.
இதற்கமைய, கணக்கெடுப்புக்கு முந்தைய வாரத்தில் 70.4 வீத மாணவர்கள் குறைந்தது ஒரு முறையாவது துரித உணவையே உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam