பசியால் வாடும் பாடசாலை மாணவர்கள்..! வெளியான தகவல்
பாடசாலைகளில் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வில், ஏராளமான பாடசாலை மாணவர்கள் பசி மற்றும் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு மற்றும் குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் ஆகியவை கடந்த ஆண்டு இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளன.
இதற்கமைய, 40 அரச பாடசாலைகளில் 8 மற்றும் 12ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 3,843 மாணவர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
உட்கொள்ளும் உணவு...
இதில், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 4.7 சதவீதமானோர் பசியால் வாடுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 17.4 வீதமானோர் ஆரோக்கியமற்ற பானங்களை உட்கொள்வதாகவும், அவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், 28 வீதமான மாணவர்கள் தினமும் சர்க்கரை பானங்களை உட்கொள்வதாகவும், 28.5 வீதமானவர்கள் உப்பு நிறைந்த சிற்றுண்டிகளை உட்கொள்வதாகவும் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், 29.3 வீதமான மாணவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளையும், 40.9 வீதமானோர் அதிக சீனி உள்ள உணவுகளையும் தினமும் உட்கொள்வதாக அறிக்கை கூறுகிறது.
இதற்கமைய, கணக்கெடுப்புக்கு முந்தைய வாரத்தில் 70.4 வீத மாணவர்கள் குறைந்தது ஒரு முறையாவது துரித உணவையே உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam