கொழும்பு துறைமுக நகரத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள்
கொழும்பு துறைமுக நகரத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திக்காக, காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்ட செயற்பாட்டிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அபிவிருத்தி
இதற்கமைய கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக காணிகளை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் 6(1) (c) பிரிவின் விதிகளின்படி மருத்துவமனை, பாடசாலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கான காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
