உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
அடுத்த ஆண்டு முதல் க.பொ.த. உயர் தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கு, 80 சதவீத பாடசாலை வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இன்று (28.11.2022) கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் வருகை
நாட்டில் கோவிட் தொற்று, போக்குவரத்து பிரச்சினை மற்றும் எரிப்பொருள் தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் காரணமாக பாடசாலை மாணவர்களின் பாடசாலை வருகை வீழ்ச்சியடைந்திருந்தது.
தற்போது சற்று வழமைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் மாணவர்களின் வருகை தொடர்ச்சியாக குறைவடைந்து வந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் க.பொ.த. உயர் தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 80 சதவீத பாடசாலை மாணவர்களின் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.