சதொசவில் குறைக்கப்படும் உணவுப் பொருட்களின் விலை
லங்கா சதொச நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பல உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போதுள்ள 450 லங்கா சதொச கிளைகள் இவ்வருடம் 500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
பொருட்களின் விலை குறையும்
இந்தநிலையில், சதொச கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் மக்களுக்கு விலையை குறைத்து மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வரி அதிகரிப்பின் காரணமாக பொதுமக்களுக்கு சற்று சுமை கூடியிருக்கும் என்று என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
