வைத்தியசாலையின் பணிப்பாளர்களாக மலர்சாலை உரிமையாளர்களை நியமிக்கலாம்! சுகாதார அமைச்சருக்கு பொன்சேகா பதிலடி

Keheliya Rambukwella Sarath Fonseka President of Sri lanka Rajapaksa Family
By Benat Jul 21, 2023 03:10 PM GMT
Report

ராஜபக்சர்கள் உட்பட அவர்களின் சகாக்கள் அரச நிதியை மோசடி செய்து, தேசிய வளங்களை விற்று அதிலும் கொள்ளையடித்ததால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை முழு உலகமும் நன்கு அறியும். இவ்வாறான நிலையில் நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய ராஜபக்சர்களின் சகாக்கள் தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாடு ஸ்த்திரமடைந்து விட்டது, மக்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள் என அரசாங்கமும், ஒருசில அரசியல்வாதிகளும் உளறிக்கொள்கிறார்கள். நாடு இன்றும் நெருக்கடியில் உள்ளது என்பதே உண்மை.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு பின்னர் பொருளாதார பாதிப்பில் இருந்து மீளலாம் என குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் பகல் கனவு காண்கிறது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நாங்கள் (எதிர்க்கட்சிகள்) ஒத்துழைப்பு வழங்கவில்லை என அரசாங்கம் குறிப்பிடுகிறது. அத்துடன் நாட்டை நாங்கள் வங்குரோத்து நிலைக்கு தள்ளினோம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு கருத்துரைக்கிறார்கள்.

ராஜபக்சர்கள் உட்பட அவர்களின் சகாக்கள் அரச நிதியை மோசடி செய்து, தேசிய வளங்களை விற்று அதிலும் கொள்ளையடித்ததால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை முழு உலகமும் நன்கு அறியும். இவ்வாறான நிலையில் நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய ராஜபக்சர்களின் சகாக்கள் தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழு ராஜபக்சர்களை தூய்மைப்படுத்தும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் இனி ஒரு சதம் கூட ஊழல் இடம்பெறாது என மக்கள் மகிழ்வுடன் இருக்கலாம். 

நாட்டின் சுகாதாரத்துறை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது

மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை மாத்திரம் அரசாங்கம் முன்னெடுக்கிறது. ஊழலை எதிர்ப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பிரபல்யமான ஊழல் மோசடிகள் அரச ஆதரவுடன் இடம்பெறுகிறது. நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெற்றோர் பட்டினியில் இருந்து தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்குகிறார்கள். இவ்வாறான நிலையில் தேசிய விவசாயத்துறையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வைத்தியசாலையின் பணிப்பாளர்களாக மலர்சாலை உரிமையாளர்களை நியமிக்கலாம்! சுகாதார அமைச்சருக்கு பொன்சேகா பதிலடி | Sarath Fonseka S Parliamentary Speech

தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கடந்த ஐந்து மாதத்துக்குள் மாத்திரம் 230 பில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதாரத்துறை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மருந்து கொள்வனவினால் இலவச மருத்துவ துறையை நம்பியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்துக்கு சார்பானவர்கள் மருந்து கொள்வனவில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது இயல்பானதே என்று குறிப்பிடுகிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான நிலை ஏற்பட்டால் சுகாதார அமைச்சர் முதல் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அனைவரும் இந்நேரம் சிறைக்கு சென்றிருப்பார்கள்.

வைத்தியசாலையில் பிரேத அறை அமைக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் மலர்சாலை உரிமையாளர்களை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களாக நியமிக்கலாமே? அப்போது சுகாதார அமைச்சர் குறிப்பிடுவதை போல் இலகுவில் செயற்பட முடியும். சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்து சில்லறை தனமானது. ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US