வடக்கு கிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் மொட்டு கட்சியின் நிலைப்பாடு
வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க மொட்டு கட்சி இணங்கவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலளார் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்த தமது கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விளக்கியதாக தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் ஆணை
இந்த சந்திப்பின் போது தாமும், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் கருத்து வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
1987ம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் இதுவரையில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்பது குறித்து முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் ஆணையை வழங்கவில்லை எனவும் அவ்வாறு மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டே இந்த அதிகாரங்களை வழங்க வேண்டுமென சரத் வீரசேகர கூறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
