பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் கிரிக்கெட் ஜாம்பவான் !
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் தற்போதைய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளருமான சனத் ஜயசூரிய தனது பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த சனத் ஜயசூரிய, நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஆண்கள் ரி10 உலகக் கிண்ண தொடரில் இன்று பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிரான சூப்பர் எட்டு போட்டிக்குப் பின்னர் தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உலகக் கிண்ண தொடர் நிறைவடைந்ததும் தாம் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஜயசூர்யா முன்பே தெரிவித்திருந்தார்.

தன்னுடைய தலைமை பயிற்சியாளர் ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாக இருந்தாலும், போட்டித் தொடருக்கு அப்பால் அந்தப் பொறுப்பில் தொடர விருப்பமில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜயசூரிய, அதே ஆண்டின் இறுதியில் நிரந்தர தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார்.
அவரது பதவிக்காலத்தில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி அனைத்து வடிவங்களிலும் மொத்தம் 74 போட்டிகளில் விளையாடி, 34 வெற்றிகள் மற்றும் 38 தோல்விகளை பதிவு செய்துள்ளது. மேலும் 2 போட்டிகள் முடிவின்றி நிறைவடைந்தன.
உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணி வெளிப்படுத்திய திறமைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் பின்னணியில் சனத் ஜயசூரியவின் இந்த பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சனத் ஜயசூரிய தரப்பிலிருந்து பதவி விலகல் தொடர்பில் இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 14 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan