சனத் நிஷாந்தவிற்கு அனுதாப விவாதம்: பல கட்சி தலைவர்கள் பங்கேற்பு
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சார்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை அனுதாப விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பல கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்க உள்ளனர்.
விவாதத்தை காண குடும்பத்தினருக்கு வாய்ப்பு
சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பெரேரா மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளும் இந்த விவாதத்தைக் காண நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
