இலங்கையில் குண்டுகள் வெடித்த போது இராணுப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சுரேஷ் சாலே - வெளிவந்துள்ள தகவல்
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கையில் இருக்கவில்லை என சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுரேஷ் சாலே 2016ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறியதுடன், மீண்டும் 2018 டிசம்பர் மாதத்திலேயே நாட்டிற்குத் திரும்பினார்.
இராணுவப் பயிற்சிகளை பெற்றார்
அத்தோடு 2019 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், அவர் இந்தியாவில் உள்ள பாதுகாப்புப் படைகளின் பதவி நிலை கல்லூரியில் இராணுவப் பயிற்சியினை பெற்றுக்கொண்டிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரே சுரேஷ் சாலே மீண்டும் இலங்கை திரும்பினார். அதன் பின்னரே அவர் அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று முடிந்த பின்னரே அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam