அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க திட்டம் - வங்கி ஊழியர்கள் சங்கம்
இலாபத்தில் தற்போது இயங்கி வரும் அரச வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் போது அரச வங்கிகளே உதவுகின்றன

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியாருக்கு வழங்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க கூறியுள்ளார்.
அரச வங்கிகளின் 20 வீத பங்குகளை விற்பனை செய்ய திட்டம்

நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அத்தியவசிய மருந்துகள் உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதியுதவிகளை அரச வங்கிகளே வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், அரச வங்கிகளின் 20 வீத பங்குகளின் உரிமையை ஊழியர்கள் மற்றும் வைப்புச் செய்துள்ளவர்களுக்கு வழங்குவதாக கூறி, வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் ரஞ்சன் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam