அதிக விலைக்கு வாகன உதிரி பாகங்கள் விற்பனை! - பிரபல நிறுவனத்திற்கு எதிராக வழக்கு
2003 ஆம் ஆண்டின் நுகர்வோர் விவகார அதிகாரச் சட்டம் எண் 9 இன் படி, எந்தவொரு பொருளின் விலையும் விற்பனைக்குக் காண்பிப்பது கட்டாயமாகும்.
எனினும், இந்த நாட்டில் வாகனங்கள் மற்றும் வாகன பாகங்களை இறக்குமதி செய்யும் ஒரு நன்கு அறியப்பட்ட நிறுவனம் மேற்கண்ட விதிகளை மீறி உதிரி பாகங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புத்தளம் கிளையின் விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வாகன உதிரிபாகங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், குறைந்த விலையில் நுகர்வோரிடம் ஒப்படைக்கக்கூடிய பழைய தொகுதிகள் கூட தற்போது மிகவும் நியாயமற்ற விலையில் விற்கப்படுகின்றன.
ஒக்டோபர் 12ம் திகதி இந்நிறுவனத்திற்கு எதிராக புத்தளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக புத்தளம் நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam