ஐக்கிய தேசியக் கட்சி அடகு வைக்கப்பட்டுள்ளது! சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் எதிர்காலத்தில் நெலும் மாவத்தையில், காக்கையிடம் வேட்புமனு பெற வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மகிந்தவிடம் சென்று துயரங்களை தெரிவிக்க வேண்டிய நிலை
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் சென்று தமது துயரங்களைத் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி அடகு
வைக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் வரை எந்தவொரு உதவியும் வழங்கப்போவதில்லை என சர்வதேச அமைப்புக்கள் தெரிவித்துள்ளன என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் கூறினார்.
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri