விசேட தேவை கொண்டவர்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ள சஜித்தின் 3 வீதக்கொள்கை
ஐக்கிய மக்கள் சக்தி (SJB), கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விசேட தேவை கொண்ட சமூகத்தை வலுவூட்டுவதற்கான தனது கொள்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் 1.6 மில்லியன் அங்கவீனமுற்ற பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa ) இதன்போது அறிவித்துள்ளார்.
தேசிய கொள்கையின் அவசியம்
இந்த விடயத்தில் ஒரு விரிவான தேசிய கொள்கையின் அவசியத்தை வலியுறுத்திய பிரேமதாச, விசேட தேவையுடையவர்களுக்கு 3வீத வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தவும், கொடுப்பனவுகளை அதிகரிக்கவும், அத்தியாவசிய உபகரணங்களுக்கான வரிகளை நீக்கவும் உறுதியளித்துள்ளார்.

அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்களுடன், காப்புறுதி தொகை மற்றும் வங்கிக் கடன்களுக்கான அணுகலை எளிதாக்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam