சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயாராகும் சஜித் அணி
அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் குழு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, கபீர் ஹாசிம், தலதா அத்துகோரள, எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் குழு விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

நிபந்தனைகளின் பேரில் ஆதரவு
அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஆதரிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கலந்துரையாடலில் நிபந்தனைகளின் பேரில் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இது குறித்து மேலும் விவாதிக்க உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிறுபான்மை கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan