159 வருட நிறைவுவையொட்டி பொலிஸாருக்கான பாதுகாப்பான குடிநீர்..!
இலங்கை பொலிஸாரின் 159 ஆவது ஆண்டு நிறைவையொட்டி பொலிஸாருக்கான பாதுகாப்பான வடிகட்டிய குடிநீர் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்கும் திட்டம், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையில் இன்று காலை 8:45 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
இலங்கை பொலிஸ் சேவையின் 159 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கேசன்துறை பிரதி பொலிஸ் மா அதிபர் 2 பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை, நெல்லியடி, பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரிவுகளுக்கு பாதுகாப்பான வடிகட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
காங்கேசன்துறை பிரதி பொலிஸ் மா அதிபர் G.w.s சந்தண பிரதம விருந்தினராக கலந்துகொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
அதனை தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிரிசாந்த பிரிஸ், நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கேமந்தரொகான் உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலரும் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இதில் வல்வெட்டித்துறை, நெல்லியடி, பருத்தித்துறை, மருதங்கேணி பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.








