அடுத்த ஜனாதிபதியாக யாரை நியமிக்க வேண்டும்..! எஸ்.பி.திஸாநாயக்க கூறும் விடயம்
அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், நாட்டை கட்டியெழுப்பும் திறமை ஜனாதிபதிக்கு உண்டு.
ரணிலிடம் உள்ள ஆற்றல்
வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆற்றல் ஜனாதிபதி ரணிலிடம் உண்டு.
எனினும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க தவறியுள்ளனர்.
எனவே அரச இயந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |