கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்ய தம்பதி
ரஷ்யா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஷ்ய தம்பதியரின் பயணப் பொதியில் துப்பாக்கி போன்ற இரண்டு சாதனங்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
33 வயதான இந்த ரஷ்ய பிரஜை, அவரது 26 வயதுடைய ரஷ்ய மனைவி மற்றும் 09 வயதான மகன் ஆகியோர் நேற்று ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தி்றகு வருகைத்தந்தனர்.
கொழும்பு-05 பகுதியில் வசிக்கும் இவர்கள் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் பிரவேசித்த போது, விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட ஸ்கேன் சோதனையில் அவர்களின் பயணப் பொதிகளில் கைத்துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று குறித்த இடத்திற்கு வந்து ரஷ்ய பிரஜைகளை கைது செய்துள்ளது.
இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் வினவிய போது,
இந்த கைத்துப்பாக்கிகளில் தோட்டாக்களை வெளியிடும் பகுதி இல்லை எனவும், ஆனால் தோட்டாக்கள் செல்லும் குழாய் இரும்பினால் செய்யப்பட்டமை சந்தேகத்திற்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இந்தக் கைத்துப்பாக்கிகளை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு களப் படைத் தலைமையகத்தில் சமர்ப்பிக்க கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், இந்தக் கைத்துப்பாக்கிகள் பொம்மைகளா இல்லையா என்ற தீர்மானத்தின் அடிப்படையில் ரஷ்ய தம்பதிகள் தொடர்பில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ரஷ்ய தம்பதியின் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
