எதிர் தாக்குதல் தொடர்பில் உக்ரைன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆக்கிரமிப்பு படைகளிடமிருந்து உக்ரைன் பிரதேசத்தை மீட்பதற்கான தாக்குதல் "நாளை, நாளை மறுநாள் அல்லது ஒரு வாரத்தில் தொடங்கும்" என உக்ரைனின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்ய மோதலின் தீவிரம் தொடர்பில் உலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகளுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்கான சரியான திகதியை குறிப்பிடவில்லை என குறித்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரே இரவில் நடத்திய தாக்குதல்
இந்நிலையில் கீவ் மற்றும் டினிப்ரோ நகரம் மற்றும் உக்ரைனின் கிழக்கு பகுதிகள் மீது ஒரே இரவில் நடத்திய தாக்குதலில் 10 ஏவுகணைகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இரவு நேர சோதனையின் போது மொத்தம் 17 ஏவுகணைகள் மற்றும் 31 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 15 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
