அரசாங்கத்தின் பிரதான ஊடக நிறுவனங்களில் இருந்து திடீரென பதவி விலகிய தலைவர்கள்
அரசாங்கத்தின் பிரதான ஊடக நிறுவனத் தலைவர்கள் பதவி விலகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனம் என்பனவற்றின் தலைவர்களே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் அனுஷ பெல்பிட்ட பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவி விலகல் கடிதம் சமர்ப்பிப்பு
மேலும் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் டபிள்யூ.பி.கனேகே பதவி விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் தமது பதவி விலகல் கடிதங்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த பதவி விலகல் தொடர்பில் லேக்ஹவுஸ் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
