அறிகுறிகள் தென்படாத கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நோய் அறிகுறி தென்படாத கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன (Rukshan Bellana) தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் பாடசாலை மாணவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றாது ஏனைய தரங்களில் கற்கும் மாணவர்ளுக்கும் பாடசாலைகளை ஆரம்பிப்பது உசிதமானதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறு செய்வதனால் மீண்டும் கோவிட் பரவுகை ஏற்படக்கூடும். அண்மைய நாட்களில் கோவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கையில் சரிவு நிலை ஏற்பட்டிருந்த போதிலும், நோய் அறிகுறி தென்படாத தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆபத்தானது.
நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட போதிலும், பாடசாலை சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படாமையினால் சுகாதார வழிகாட்டல்களை கிரமப்படுத்தி அமுல்படுத்த வேண்டும்.
எழுமாறான அடிப்படையில் நாடு முழுவதிலும் கோவிட் பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri