ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றும் ஒரு பெண் துஷ்பிரயோகம்! ரிஷாட்டின் மைத்துனரும் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் முன்னதாக பணியாற்றி 22 வயதான பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனின் மைத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி கடந்த 3ம் திகதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்களின் பின்னர் அண்மையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.