நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,959 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 17 பெண்களும், 25 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,128 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 290,705 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.