இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிகையில் திடீர் உயர்வு!
இலங்கையில் மேலும் 23 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த 23 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,484 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 567,682 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் கோவிட் தொற்றில் இருந்து மேலும் 362 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, இதுவரை தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,688 ஆக அதிகரித்துள்ளது.