ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு - கட்டார் அதிரடி அறிவிப்பு
கட்டாரை நோக்கி கடந்த வியாழக்கிழமை முதல் ஈரானிடமிருந்து ஏவுகணைகளோ அல்லது ட்ரோன் தாக்குதல்களோ வரவில்லை என்றாலும், நிலைமை இன்னும் "புயலின் மையப்பகுதியில்" (eye of the storm) இருப்பதாக கட்டார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அல்-அன்சாரி எச்சரித்துள்ளார்.
கட்டாரை இலக்கு வைத்து கடந்த சில நாட்களாக நேரடித் தாக்குதல்கள் ஏதும் நடைபெறவில்லை என்றாலும், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் இன்னும் தணியவில்லை என்று அல்-அன்சாரி தெரிவித்துள்ளார்.
ஈரான் தொடர்ந்து தாக்குதல்
வளைகுடா பகுதியில் உள்ள அண்டை நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலையும் கட்டார் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.

கடந்த காலங்களில் தான் உரையாற்றி முடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே தாக்குதல்கள் நடந்த கசப்பான அனுபவங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இதுவரை கட்டாரை நோக்கி ஏவப்பட்ட 200க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
தாக்குதல்களுக்குப் பதிலடி
கட்டார் தற்போது தற்காப்பு நிலையிலேயே (Defensive posture) இருப்பதாகவும், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கவும் தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இருப்பினும், ஈரானுக்கு எதிராகப் பதிலடி கொடுப்பது குறித்து இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam