இலங்கையில் புத்தாண்டில் நெருக்கடி : முறையிட முடியாமல் மக்கள் தவிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போதைய பற்றாக்குறை காரணமாக இந்த அரிசி வகைகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
அதற்கமைய, சில பகுதிகளில், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 310 முதல் 320 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
வாடிக்கையாளர்கள்
ஒரு கிலோ சம்பா அரிசி 270 மற்றும் 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
பல பகுதிகளில், கடை உரிமையாளருக்கு மிக நெருக்கமான வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த விலையில் அரியை கொள்வனவு செய்ய முடியும். எனினும் அதற்கான ரசீதுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
அரிசி விற்பனை
ரசீது கோரப்படும்போது, "Others" என்று குறிப்பிட்டே ரசீது வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக, நுகர்வோர் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் முறைப்பாடு செய்ய முடியவில்லை என பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
