விண்வெளி பயணத்தில் புரட்சி! வரலாற்று நிகழ்வு அரங்கேறியது
அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் அலன் மஸ்க்கின் ஸ்பேஸ்-X நிறுவனம், முதல்முறையாக நான்கு அமெரிக்கர்களை விண்வெளிக்கு சுற்றுலாவுக்காக அனுப்பியுள்ளது.
விண்வெளி சுற்றுலா வணிகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்-X ரொக்கெட் மூலமாக இவர்கள் புறப்பட்டுள்ளனர்.
இலங்கை நேரப்படி இன்று காலை 5.32 மணிக்கு பால்கான் ரொக்கெட் 4 சுற்றுலாப்பயணிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அனுப்பும் அலன் மஸ்க்கின் திட்டம் முதல்கட்ட வெற்றியை பெற்றுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களை தாங்கி வரும் விசேட தொகுப்பு இதோ,