இலங்கையில் வழமைக்கு திரும்பும் பாடசாலை நடவடிக்கைகள்
இலங்கையில் அனைத்து மாணவர்களுக்குமான பாடசாலை செயற்பாடுகள் வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று முழுமையாக திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் பாடசாலைகளின் உணவகங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தங்களுக்கான உணவுகளை பாடசாலைக்கு வெளியே மாணவர்கள் பெற்று வர வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாடசாலைகளில் உள்ள உணவகங்கள் சுகாதார பிரிவினரின் பரிந்துரைகளின் பின்னரே திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தீவிரமாக பரவிய கோவிட் தொற்று காரணமாக கல்வி நடவடிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.