தனிமைப்படுத்தலை மீறி கோவிட் தொற்றுடன் நடமாடியவர் மடக்கி பிடிப்பு
கோவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் நடமாடித் திரிவதாக வவுனியா சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர், கைது செய்யப்பட்டு கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சிவபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த கோவிட் தொற்றாளர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கோவிட் தொற்றுடன் வீட்டில் இருந்து வெளியேறி பல்வேறு வேலைகளில் ஈடுபடுவதாகவும், நடமாடித் திரிவதாகவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சுகாதாரப் பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து குறித்த நபரை தேடி விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சிறிய ரக உழவு இயந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற நிலையில் குறித்த கோவிட் தொற்றாளர் சுகாதாரப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் உடனடியாகவே வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
