பிலிப்பைன்ஸ் வரும் பயணிகளுக்கு மேலும் கட்டுப்பாடுகள் நீடிப்பு
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜூன் 30 வரை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளது.
இதனை அந்த நாட்டு ஜனாதிபதியின் பேச்சாளர் ஹரி ரோக் அறிவித்துள்ளார்.
ஜூன் 20, இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ஏழு நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட்-19 டெல்டா மாறுபாட்டின் தொற்றுகள் பிலிப்பைன்ஸில் பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நீடிப்பு மேற்கொள்ளப்படுவதாக ரோக் கூறியுள்ளார்.
டெல்டா மாறுபாடு அதிக அளவில் பரவக்கூடியதாகக் காட்டப்பட்ட பிற நாடுகளின்
அனுபவத்தை ரோக் தமது அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளார்.