மதிமுகவில் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு? வெளியான தகவல்
மதிமுகவில் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு ஒன்று காத்திருப்பதாகவும் வரும் செப்டம்பர் மாதம் அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக வைகோவால் முன்பை போல் இப்போது பயணம் செய்யவோ கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவோ முடிவதில்லை.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது உடல் தளர்ந்துள்ளதால் தந்தையின் இடத்தில் நின்று கட்சிப் பணிகளைக் கவனித்து வருகிறார் துரை வைகோ.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழன்று வாக்குச் சேகரித்தார் துரை வைகோ.
இன்னும் சொல்லப்போனால் சாத்தூர் தொகுதியில் தனிக் கவனம் செலுத்தி அந்த தொகுதியின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து வெற்றியும் பெற வைத்தார்.
இதனால் மதிமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் வைகோவின் மகனான துரை வைகோவைக் களத்தில் இறக்கத் தயாராகிவிட்டார்கள் புரட்சிப் புயலின் தம்பிமார்கள்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri