மதிமுகவில் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு? வெளியான தகவல்
மதிமுகவில் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு ஒன்று காத்திருப்பதாகவும் வரும் செப்டம்பர் மாதம் அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக வைகோவால் முன்பை போல் இப்போது பயணம் செய்யவோ கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவோ முடிவதில்லை.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது உடல் தளர்ந்துள்ளதால் தந்தையின் இடத்தில் நின்று கட்சிப் பணிகளைக் கவனித்து வருகிறார் துரை வைகோ.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழன்று வாக்குச் சேகரித்தார் துரை வைகோ.
இன்னும் சொல்லப்போனால் சாத்தூர் தொகுதியில் தனிக் கவனம் செலுத்தி அந்த தொகுதியின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து வெற்றியும் பெற வைத்தார்.
இதனால் மதிமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் வைகோவின் மகனான துரை வைகோவைக் களத்தில் இறக்கத் தயாராகிவிட்டார்கள் புரட்சிப் புயலின் தம்பிமார்கள்
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan