அவசரகால பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரிக்கை
அவசரகால நிலைமை பிரகடனப்படுத்திய உத்தரவை உடனடியாக இரத்துச் செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடிப்படை உரிமைகளான அமைதியாக ஒன்றுக்கூடல், கருத்து சுதந்திரம் மற்றும் வெளியீட்டு சுதந்திரத்தை பாதுகாக்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டதால் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் செயலாளர் இசுரு பாலபட்டபெந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
அவசரகால நிலைமை பிரகடனம் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.