மன்னார் காற்றலை தொடர்பில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் கோரிக்கை
மன்னார் காற்றலை மின் உற்பத்தி ஆலை விவகாரம் தொடர்பில் மக்களின் நலன்களுடன் அவர்களது கருத்துக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு கந்தையா ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (28.10.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இன்று மன்னார் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுள் ஒன்றாக இந்த காற்றலை விவகாரம் மாறியுள்ளது. குறித்த திட்டத்துக்கு அரசாங்க அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது.
மன்னார் ஆயரை ஜனாதிபதி சந்தித்த போதும் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றே கூறியிருந்தார். ஆனால் மன்னார் ஆயர் இன்றும் மக்களின் விருப்பத்தின் பக்கமே இருக்கின்றார்.
மக்களின் கோரிக்கை இன்று 80 நாட்களை கடந்து போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களின் நலன்களில் நாமும் பங்காளர்களாக இருந்து அவர்களது போராட்டத்தையும் கோரிக்கையையும் வலுச்சேர்க்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri