தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி!
அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் டொனால்ட் ரம்ப்பின் குடியரசு கட்சி கீழ்சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
சவால் மிக்க காலம்
இந்தநிலையிலேயே கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி, சிறிய பெரும்பான்மையுடன் மொத்தம் உள்ள 435 இடங்களில் 218 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்த முடிவுகளை அடுத்து அடுத்த இரண்டு வருட கால கட்டம், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு
சவால் மிக்க காலமாக அமையும் என்று எதிர்வுகூரப்படுகிறது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
