தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி!
அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் டொனால்ட் ரம்ப்பின் குடியரசு கட்சி கீழ்சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
சவால் மிக்க காலம்

இந்தநிலையிலேயே கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி, சிறிய பெரும்பான்மையுடன் மொத்தம் உள்ள 435 இடங்களில் 218 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்த முடிவுகளை அடுத்து அடுத்த இரண்டு வருட கால கட்டம், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு
சவால் மிக்க காலமாக அமையும் என்று எதிர்வுகூரப்படுகிறது.
டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங் Cineulagam
எல்லைமீறிய கவர்ச்சியில் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்.. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் Cineulagam
சுவிட்சர்லாந்தின் மன்னர் என அறிவித்த நபர்..117,000 சதுர மீற்றர் சாம்ராஜ்யம்..அரசியல்வாதிகள் சீற்றம் News Lankasri