மானிப்பாய் பிரதேச சபையின் அறிக்கையில் பிழை - பல உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது கடந்த கூட்ட அறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த கூட்ட அறிக்கையில் கடந்த காலங்களை விட பல தவறுகள் உள்ளதாக பல உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
எனவே, குறித்த அறிக்கையை தயாரிப்பதற்கு மேலதிக உத்தியோகத்தர்கள் தேவை ஏற்படின் அவர்களை நியமிக்குமாறு உறுப்பினர் அச்சுதன் கோரிக்கை முன்வைத்தார்.
மேலும், சபை கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அறிக்கையை வழங்கினால் அதனை வாசித்துவிட்டு திருத்தங்கள் குறித்து கருத்துக்கள் முன்வைப்பதன் மூலம் சபை அமர்வின் போது திட்டமிடப்பட்டுள்ள ஏனைய விடயங்களுக்கான நேரத்தில் பாதிப்பு ஏற்படாது என உறுப்பினர் பகீரதன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




