இவரை கண்டால் அறிவிக்கவும்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
150 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, சொத்தைக் கையகப்படுத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு 03 இனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பெண், வேறொருவராக ஆள்மாறாட்டம் செய்து போலி உறுதியில் கையெழுத்திட்டுள்ளதுடன், இந்த சந்தேகநபரான பெண் பொலிஸாரைத் தவிர்த்து தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களால் அதிகரிக்கும் ஆபத்து - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சந்தேகநபரின் புகைப்படம்
குறித்த பெண் தங்கியுள்ள இடம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரின் புகைப்படத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன், சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள் - வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு 03 - 011 - 2434504 நடவடிக்கை அறை - 011 - 2422176 (குற்றப் புலனாய்வுத் திணைக்களம்)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |