அன்னை பூபதியின் இறுதி வார 5ஆம் நாள் நினைவேந்தல் (Video)
அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி முன்னெடுக்கப்பட்டது.
அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி இன்று மதியம் 01 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து ஆரம்பமாகியது.
நல்லூரில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த ஊர்தியானது தமிழர் தாயகத்தை வலம்வந்து மட்டக்களப்பிலிருக்கும் அன்னை பூபதி நினைவிடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.பல்கலையில் நினைவேந்தல்
அன்னை பூபதியின் உணவு தவிர்ப்பு அறப்போராட்டத்தின் இறுதி வார 5ஆம் நாள் நினைவேந்தல் இன்று (16.04.2023) யாழ்.பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.
அன்னை பூபதியின் நினைவேந்தல் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகம் உட்பட தமிழர் வாழும் தேசம் எங்கும் இவ்வருடம் நினைவேந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.







ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 36 நிமிடங்கள் முன்

மிகப்பெரிய புதையலை கண்டுபிடித்துள்ள இந்தியாவின் அண்டை நாடு.., அடுத்த 50 ஆண்டுகளுக்கான ஜாக்பாட் News Lankasri

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam
