பிரதம நீதியரசரின் வாகனத் தொடரணியை காணொளிப் பதிவு செய்தவருக்கு விளக்கமறியல்
பிரதம நீதியரசரின் வாகனத் தொடரணியை காணொளிப் பதிவு செய்த நபரொருவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசரின் வாகன அணிவகுப்பை காணொளிப் பதிவு செய்ததாக சந்தேக நபரொருவர் கறுவாத் தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம மு ன்னிலையில் நேற்று (8) முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் குறித்து தொடர்ந்தும் விசாரணை இடம்பெறுவதாக குறிப்பிட்ட கறுவாத் தோட்டம் பொலிஸார், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.
மன்னிப்பு
அத்துடன், சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையை கோருவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
சந்தேக நபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட வாகன அணிவகுப்பை காணொளி எடுத்ததற்காக தமது கட்சிக்காரர் மன்னிப்பு கேட்டதாகவும், எனவே அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கான உத்தரவையும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
