வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இம்ரான் எம்.பி மூலம் நிவாரணம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா, மூதூர் மக்களுக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நிவாரணம் வழங்கி வைத்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரதேச செயலகத்தின் நிவாரண பணிகளுக்கு உதவும் முகமாக ஒரு தொகை கோதுமை மா இன்று பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டது.
அனர்த்த நிலைமைகளின் போது அரசின் செயற்பாடுகள்
நாளை தினம் ஏனைய பிரதேச செயலகங்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.இதற்கு மேலதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை மாவட்டம் முழுவதும் எனது பிரதிநிதிகள் மூலம் முன்னெடுத்துள்ளேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண பணிகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் கூறுவது போன்று அனர்த்த நிலைமைகளின் போது அரசின் செயற்பாடுகள் மந்த கதியிலயே நடைபெறுகின்றன.
எனவே ஜனாதிபதி இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 3 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan