விடுதலை செய்யுங்கள் அல்லது கருணை கொலை செய்யுங்கள்! - கதறும் ஈழ அகதிகள்
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக் கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியே கடந்த சில நாட்களாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள, ஸ்டாலின் எங்களை விடுதலை செய்ய வேண்டும், என்று தொடர்ந்து 8வது நாளாக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் பல்வேறு தலைவர்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து தலைவர்கள் சிலர் இவர்களின் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.