தமிழர் பகுதியில் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும் றீ(ச்)ஷா பண்ணையில் மாபெரும் உணவு திருவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை இந்த உணவு திருவிழா நடைபெறவுள்ளது.
நுழைவு கட்டண விபரங்கள்
குறித்த தினங்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ள இந்த உணவு திருவிழாவில், இசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறவுள்ளன.
இந்த உணவு திருவிழாவில் பங்கேற்கும் 5 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1000 ரூபாவும் 5 வயது தொடக்கம் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 2000 ரூபாவும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 3000 ரூபாவும் நுழைவு கட்டணம் அறவிடப்படும்.
றீ(ச்)ஷாவின் மாபெரும் உணவு திருவிழாவில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 0777772353 மற்றும் 0777772354 என்ற இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.









