அடுத்த தேர்தலுக்குள் மேற்கொள்ளவுள்ள முக்கிய நடவடிக்கை - ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, உள்ளூராட்சி சபைகள்/நகர சபைகள் மற்றும் நகர சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இல் இருந்து 4000 ஆக குறைக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை ஒரு தலைவருக்கு வழங்காமல், அவை தலைவர் அடங்கிய குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் உரிய திருத்தங்களை உள்ளடக்கி சட்ட வரைவு தயாரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிபுணர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியல் ஊழல்களுக்கு முக்கிய காரணம் விருப்புரிமை முறையே என ஜனாதிபதி தெரிவித்தார்.
கலப்பு முறை அல்லது பட்டியல் முறை தொடர்பில் விருப்பு வெறுப்புகள் அற்ற தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, நாடாளுமன்ற வாக்களிப்பு முறை தொடர்பில் தீர்மானிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறும் பரிந்துரைத்துள்ளார்.
இதன்படி, ஜூன்-ஜூலைக்குள் முடிவெடுக்க முடியாவிட்டால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan
