18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம், குருநாகல், கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, பதுளை, களுத்துறை, இரத்தினபுரி, மொனராகலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய 18 மாவட்டங்கள் பின்வருமாறு பெயரிடப்பட்டுள்ளன.
தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam