ஆலங்கேணியில் தனியார் காணி ஒன்றில் கைக்குண்டு மீட்பு
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணியில் தனியார் காணி ஒன்றில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகக் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கைக்குண்டு நேற்று(16) மாலை மீட்கப்பட்டுள்ளது.
நவராத்திரியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட இருந்த தீ பள்ளயத்துக்கு குழி (தீ மிதிப்பு) ஒன்றை வெட்டும் போது அக்குழியிலிருந்து பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் ஒருவருக்குச் சொந்தமான (பத்ம நாதன் – செந்தில்குமரன்) பத்தரகாளியம்மன் கோயில் வளாகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணி உரிமையாளர் குண்டு கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கிண்ணியா பொலிஸார் கைக் குண்டை மீட்டுள்ளனர். SFG – 87 ரக குண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசேட பொலிஸ் அதிரடிப் படையின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
