யாழ்ப்பாணம் - புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 299 மில்லியன் மக்களின் வரிப் பண நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடக்கு மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர்கள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மிக நீண்ட காலமாக தீவக மக்கள் துறைமுகம் புனரமைக்கப்படாததால் பல்வேறு அசெளகரிகங்களை எதிர்நோக்கி வந்தனர் தற்போது துறைமுகம் புனரமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளதால் கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு நைனாதீவு அனலைதீவு எழுவைதீவு போன்ற தீவகப் பகுதிகளுக்கு செல்லும் கடல் பயணிகள் மற்றும் உல்லாச பயணிகளுக்கு இலகுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.





