ஈழத்தமிழர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு கொடுத்த அங்கீகாரம்!
“70 ஆண்டுகள் 70 முகங்கள்” என்ற தலைப்பில், சுவிட்சர்லாந்து இலங்கையுடன் கொண்டுள்ள தூதரக உறவுகளை கொண்டாடும் வகையில், நடந்த நிகழ்வில் பல தமிழ் முகங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற சிறப்புக் கண்காட்சியிலேயே சைவநெறிக்கூட இணைப்பாளர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமாரின் செயற்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, சைவநெறிக்கூட இணைப்பாளர்கள் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் மற்றும் பிற சார்பாளர்கள் பங்கேற்றனர்.
40 வருட நிறைவு
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, ஒரு நாட்டின் அரசு ஒருவரை மதிப்பளிப்பது, அவர் சமுதாயத்தில், பண்பாட்டுத் துறையில், அறிவியலில் அல்லது பொதுநலத்திற்காகச் செய்த சிறந்த பணிகளை வெளிப்படையாக பாராட்டி மரியாதை செய்வதை குறிக்கிறது.

இதற்காக அந்த நபருக்கு பதக்கம், விருது அல்லது சிறப்பு பட்டம் போன்றவை வழங்கப்படலாம். இது அரசு அளிக்கும் மதிப்பை வெளிப்படுத்தும் ஒரு அங்கீகாரமாகும்.
சைவநெறிக்கூடத்தின் பங்களிப்பு சமூகத்தாலும், சுவிஸ் மற்றும் தாயகத் தமிழர் தொண்டு அமைப்புகளாலும் மதிக்கப்பட்டு, மேலும் நல்ல செயல்களை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது. சுவிட்சர்லாந்தில் 40 ஆண்டுகளாக வாழ்ந்தாலும், தமிழர்கள் இப்பொழுது சுவிஸ் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் பெற்றுள்ளனர்.
முன்பே தாயகத் தமிழர்களின் ஆற்றல் சுவிஸ் அரசியலில் முக்கிய பாத்திரமாக இருந்து வந்தது. கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் ஈழத்தமிழர்களுக்கு இரண்டு முனைப் பொறுப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன்படி, பிறந்த நாட்டின் நலன் மற்றும் வாழும் நாட்டின் வளம் இரண்டையும் மக்களுக்கு பயனாக மாற்றுதல்.

நிகழ்வில், சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் தற்பொழுது பேர்ந் பல்கலைக்கழகத்தில் முதுகலை கற்கையினால் நேரில் பங்கேற்க முடியவில்லை. ஆனால், சைவநெறிக்கூட சார்பில் இலங்கை யாழ். இணுவில் அருட்சுனையர் தனியொளிச்சிவம் செல்லத்துரை பிரசாத் மற்றும் செந்தமிழ் அருட்சுனையர் சிவத்திரு. சாந்தமணி பிரேமதாசன் பங்கேற்றனர்.
மனு கையளிப்பு
சுவிட்சர்லாந்து அரசு அளிக்கும் மதிப்பளிப்பை ஏற்றுக் கொள்ளும் விதமாக, “புலம்பெயர் தமிழர்கள் 40 ஆண்டுகள்” குழுமத்தின் முனைப்பில், தமிழர்களுக்கான நீதிக்கான மனு (விண்ணப்பம்) 03.03.2026 செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்து நடுவனரசு தலமைச்செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் வெளிநாட்டு கொள்கை மனித உரிமைகள், பன்னாட்டு சட்டம் மற்றும் மனிதாபிமான மதிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

70 ஆண்டு தூதரக உறவுகள் கொண்டாட்டம், கடந்த காலத்தை நினைவுகூரும் நிகழ்வாக மட்டுமல்லாமல், இடர் ஏந்தி வாழும் தமிழர்களுக்கு நீதியைப் பெற வழிகளை உருவாக்கும் முயற்சியாகவும், அறத்தை முறைப்படி நிறுவ சுவிட்சர்லாந்து அரசு உறுதிப்படுத்த வேண்டிய நிகழ்வாகவும் இருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தாலும், அதை தமிழ் மொழிக்கும், இனத்திற்கும், தாயகத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் செயலாற்றல் செய்யவே சைவநெறிக்கூடம் முனைகிறது.

மத்திய கிழக்கில் வெடிக்கும் போர்: கடலின் ஆழத்திலிருந்து வெளிவந்த உலக அழிவின் அறிகுறி - கிளம்பும் பீதி
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri