வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பாரிய வீழ்ச்சியின் பின்னணி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்தமையே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதான காரணம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஆளுநர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் இறக்குமதிக்கான அந்நிய செலாவணித் தேவை அதிகரித்துள்ளதால், ரூபாயின் மதிப்பு மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் வீழ்ச்சி
2026 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாய் 4.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இந்திய ரூபாய் 6.4 சதவீதத்தாலும், நேபாள ரூபாய் 6.2 சதவீதத்தாலும், இந்தோனேசிய நாணயம் 5.2 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வீழ்ச்சி நிலைமை இலங்கைக்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணெய் இறக்குமதியில் பெருமளவில் தங்கியுள்ள பல நாடுகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாய் கடுமையாக வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டில் நிலவிய குறிப்பிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளே காரணமாகும்.
தற்போதைய சூழ்நிலை அதிலிருந்து வேறுபட்டு சர்வதேச சந்தையின் தாக்கங்களுடன் தொடர்புடையதாக மாறியுள்ளது.
நாணய மாற்று விகிதத்தின் மாற்றங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தீர்மானிப்பது தவறு என மத்திய ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 11 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri