தலதா மாளிகையில் விற்பனை செய்யப்பட்ட புத்தரின் பல்லால் சர்ச்சை
தலதா மாளிகையில் உள்ள புத்தரின் புனித பல் ஜப்பானுக்கு விற்பனை செய்துள்ளதாகச் சிலர் கூறுகின்றனர் என ராவணா லங்கா ஜாதிக சபாவ என்ற சிங்கள அமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வாறு விற்பனை செய்யப்பட்டது உண்மையான புத்தரின் புனித பல்லா அல்லது போலியான பல்லா என அந்த அமைப்பின் தலைவர் நிஷ்சங்க மாயாதுன்னே கேள்வி எழுப்பியுள்ளார்.
தலதா மாளிகையில் தற்போது வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தலதா மாளிகைக்குச் சொந்தமான காணிகள் மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக உரிய விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் நிஷ்சங்க மயாதுன்னே குறிப்பிட்டுள்ளார்.